சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் களமிறங்கி பல்வேறு சமூக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மஇகாவின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் உயர்கல்விக்கூட மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக உயர்கல்விக்கூடங்கள் மூடப்பட்டு இணையம் வாயிலாக கல்வி போதனாமுறைகள் நடத்தப்படுகின்றன.
![](https://mic.org.my/wp-content/uploads/2020/11/img-20201110-wa00051422563840442884475.jpg)
இந்நிலையில் இங்கு பி40 பிரிவு குடும்பத்தைச் சேர்ந்த உயர்கல்வி மாணவர்கள் இணையம் வழி கல்வி பயில போதிய உபகரணங்கள் இல்லாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர்.
![](https://mic.org.my/wp-content/uploads/2020/11/img-20201110-wa00068350856217129947646.jpg)
இவ்விவகாரம் தான் ஶ்ரீ விக்னேஸ்வரனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட சூழலில் 30 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குவதற்கு நடவடிக்கையை மேற்கொண்டார்.
அவ்வகையில் இன்று இங்குள்ள தேசிய முன்னணி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 30 மாணவர்களுக்கும் மடிக்கணினிகளை தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் வழங்கினார்.
https://www.mybhaaratham.com/2020/11/blog-post_57.html?m=1
Add Comment